Monday 29 July 2019

ஸ்வஸ்தி வசனம்

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளான நம் ஆச்சார்யர்களை அனுதினமும் ஆத்மார்த்தமாக ஸ்மரிக்கையிலே ஸ்வஸ்தி வசனம் சொல்லி த்யானித்து நமஸ்கரிக்கின்றோமல்லவா... அதற்குண்டான அர்த்தத்தை அடியேன் அறிந்தவண்ணமாக இன்றையதினம் பகிர்கின்றேன்.

ஸ்வஸ்தி வசனம்

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார- த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித -ஸ்ரீகாமாக்ஷீ தேவீஸனாத- ஸ்ரீமத் ஏகாம்ரநாத- ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத-
ஸாக்ஷாத்கார- பரமாதிஷ்ட்டான- ஸத்யவ்ரத நாமாங்கித- காஞ்சீ திவ்யக்ஷேத்ரே,
சாரதாமட ஸுஸ்த்திதாநாம்- அதுலித ஸுதாரஸ- மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல- மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ- ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த- துந்துலித- மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத- சாந்தி தாந்தி பூம்நாம்- ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக- ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம், நிகில பாஷண்ட ஷண்ட- கண்டகோத்காடநேந- விசதீக்ருத வேத வேதாந்த மார்க- ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம்- ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய- ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத் பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே- ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம்,அந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாநாம், ததந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதநாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம: |

பொருள்:-

ஸ்ரீமஹாத்ரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர ஸ்வாமியே போற்றி

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீஆச்சார்யர்களையும் அவர்கள் தம் திருப்பாதங்களையும் வணங்குகிறேன்.

ஸ்வஸ்திஸ்ரீ அகில பூமண்டலங்களுக்கு அலங்காரமாய், முப்பத்து முக்கோடி தேவர்களாலும் ஸேவிக்கப்பெற்று, ஸ்ரீகாமாக்ஷீ தேவியோடு விளங்கும் ஸ்ரீமத் ஏகாம்ரநாதருடைய, ஸ்ரீமஹாதேவியோடு விளங்கும் ஸ்ரீஹஸ்திகிரி நாதருடைய ஸான்னித்யத்தோடு கூடிய க்ஷேத்திரமான ஸத்யவ்ரதம் என்ற பெயர் கொண்ட காஞ்சீ திவ்ய க்ஷேத்திரத்திலே சாரதாமடத்தில் வீற்றிருப்பவர்களாகவும் ஒப்புவமையில்லாத அமிர்தத்துக்கு சமானமான இனிமையையுடையதான கமலாஸனருடைய (ப்ரும்மாவினுடைய) தேவியின் (ஸரஸ்வதியின்) திருமுடியில் அலர்ந்த மல்லிகை மாலையினின்று பெருகும் மகரந்த அருவி போன்ற சொல்மாலைகளாலே விளங்குகின்ற ஆனந்தத்தால் நிறைந்த புத்திமான்களாலே சூழப்பெற்றவர்களாகவும், சதாசர்வகாலமும் அத்வைத வித்யையிலேயே திளைத்து இன்புறுவோர்களாகவும், இடைவிடாது அலங்கரித்துக் கொண்டிருக்கும் சமதமங்களாலே பெரியோர்களாய் விளங்குவோர்களாகவும், எல்லா புவனசக்ரங்களுக்கும் ப்ரதிஷ்டை அளிப்பதான ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டாபனத்தோடு ப்ரஸித்தமான புகழால் அலங்கரிக்கப் பெற்றவர்களாகவும், பாஷண்ட ஸமூஹங்களாகிய ஸகல கண்டகங்களையும் எடுத்தெறிவதாலே செம்மையாக்கப் பெற்றவையான வேதவேதாந்த மார்க்கங்களாகிய ஷண்மதங்களையும் ப்ரதிஷ்டித்த ஆசார்யர்களாகவும் விளங்கும் ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யர்களான ஸ்ரீஜகத்குரு ஸ்ரீமத்சங்கர பகவத்பாதாசார்யர்களின் அதிஷ்டானத்திலே ஸிம்ஹாசனத்தில அபிஷிக்தர்களான ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி எனும்  உன்னதமான ஸன்யாச ச்ரேஷ்டர்களுடைய அந்தேவாஸிவர்யர்களான (வழித்தோன்றலாகிய) ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதர்களையும், ததந்தேவாஸிவர்யர்களான (அவ்வழியிலேயே விளங்கும்) ஸ்ரீமத் சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதர்களையும் அவர்களுடைய நளினமான ம்ருதுவான பாதாரவிந்தங்களையும் ஸ்மரித்துக் கொண்டு, இரு கரங்களையும் சிரசிற்கு மேலாகத் தூக்கிக் கொண்டு வணங்குகிறேன்.

அவ்யாஜ கருணையோடு இத்தகையதொரு பாக்கியம் நல்கிய ஸ்ரீசரணாளுக்கு நமஸ்காரம்...நமஸ்காரம்...நமஸ்காரம்.

Audio can be listened by clicking the below link.

http://www.kamakoti.org/kamakoti/details/swasthi%20vachakam.html

இனி பிரதி தினமும் இந்த வசனத்தைச் சொல்கையிலே அதனுடைய அர்த்தத்தை மனதார ஸ்மரித்துக் கொண்டு நமஸ்கரிப்போமே!

குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா  கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்

No comments:

Post a Comment