Tuesday 18 February 2020

"வெறும் கட்டைதான் - காஷ்டம்!"


"வெறும் கட்டைதான் - காஷ்டம்!"

( சமயப்பற்றுள்ள முஸ்லிம்களுக்காக தன் காஷ்ட
மௌனத்தை சிறிது நேரம் விட்ட மகா பெரியவா!)
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

வட பாரதத்தின் வடமேற்கு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு முஸ்லிம்கள், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்கள். அவர்கள் எல்லோரும் செல்வந்தர்கள் என்ற நினைப்பை ஏற்படுத்தினாலும்,எளிய உடை
(வேஷ்டி, குல்லாய்) அணிந்திருந்தார்கள்.

"பெரிய பெரிய தேசியத் தலைவர்கள் எல்லாம்
இந்த மஹந்திடம் (மஹானிடம்) ஆசிபெற்றுச்
சென்றிருக்கிறார்கள். என்று கேள்விப்பட்டோம்.
அத்தகைய மஹந்தை(மகானை) தரிசனம் செய்ய
வந்திருக்கிறோம்.

பெரியவாள் அன்றைய தினம் காஷ்டமௌனம்.
ஒரு ஜாடை, கண் அசைப்பு கூடக் கிடையாது.
ஏதேனும் சொன்னால் கேட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, முகத்தில் எவ்விதச் சலனமும் இருக்காது.

முஸ்லிம்கள், வெகு தூரத்திலிருந்து பக்தியோடு
வந்திருக்கிறார்கள். "இன்று பெரியவாள் பேசமாட்டார்கள்" என்று சொல்லி, ஏமாற்றத்துடன் அவர்களை அனுப்பி வைப்பது மகா - அநியாயம். ஆனால், பெரியவாளிடம் யார் போய் சொல்வது?

பாணாம்பட்டு கண்ணன் என்று ஒரு தொண்டர்,
நியாயமான துணிச்சல்காரர்.

"வடக்கேயிருந்து எட்டு முஸ்லிம்கள் வந்திருக்கிறார்கள் சமயப் பற்றுள்ளவர்கள் மாதிரி இருக்கு.ரொம்பவும் சாந்தமா இருக்கா. பெரியவாளிடம் ஆசீர்வாதம் வாங்கணும்னு ரொம்ப எதிர்பார்ப்போடு வந்திருக்கா..."
இரண்டு நிமிஷம் கழித்து பெரியவாள் வெளியே வந்தார்கள்.
"ஆயியே....ஆயியே...." என்று அவர்களை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு, ஹிந்தியில் ஒவ்வொருவரிடமும் உரையாடினார்கள்.
வந்தவர்கள், " நாங்கள் ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருக்கிறோம்.பெரியவா அனுக்ரஹம் வேணும்" என்று பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
பெரியவாள் சொன்னார்கள்.
"நீங்கள் எல்லோரும் நல்ல பக்தர்கள். தினமும் ஐந்து வேளை தொழுகை செய்யுங்கள். இது ரம்லான் மாதம். உபவாசம் இருந்து என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்.அதனாலேதான் உங்களிடம் மட்டும் பேசுவதற்காக மௌனத்தை சிறிது நேரம் விட்டுவிட்டேன்! உங்கள் கஷ்டங்கள் நீங்கும். ஆண்டவன் காப்பாற்றுவார்.."
அந்த எண்மரில், முதியவரான ஒருவருக்கு ஒரு பச்சை நிறச் சால்வையும்,மற்றவர்களுக்குப் பழமும் கொடுத்தார்கள்.
அவர்கள் ஆனந்தம் பொங்க திரும்பிச் சென்றார்கள். அப்புறம் பெரியவாளின் மௌன விரதம் தொடர்ந்தது.!
வெறும் கட்டைதான் - காஷ்டம்!

No comments:

Post a Comment