Wednesday 13 May 2020

The Life Histroy of Shri Mahava Sadasiva Golwakar alias Guruji

 ஸ்ரீ குருஜியை சர் சங்கசாலக்(தலைவர்)  என்று அறிவித்த அதிகாரி யார் ❓
🚩 நாகபுரி மாகாண சங்கசாலக்(தலைவர்)மானனீய ஸ்ரீபாபா சாஹேப் பாத்யே.

 ஸ்ரீகுருஜி சர் சங்கசாலக் ஆக பொறுப்பேற்றவுடன் தன்னை எவ்வாறு குருஜி வர்ணித்துக் கொண்டார்❓
🚩"  நான். மாடுமேய்க்கும் சிறுவன்" என்றும், விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தை போன்றது சர்சங்கசாலக் பொறுப்பு என்றும் வர்ணித்தார் .

ஸ்ரீ குருஜியின் பூர்வீக கிராமம் எது ❓
🚩 பம்பாய்க்கு தெற்கே கொங்கண பிரதேசத்தில் கோல் வாலி கிராமம் .

ஸ்ரீ குருஜியின் பெற்றோர்கள் யாவர் ❓
🚩  தந்தை ஸ்ரீ சதாசிவ ராவ் தாய் ஸ்ரீமதி லக்ஷ்மி.

ஸ்ரீ குருஜி உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் ❓
🚩  9 பேர் ஸ்ரீ குருஜி ஒன்பதாவது குழந்தை.

ஸ்ரீ குருஜி பிறந்த தேதி யாது ❓
🚩 மகா மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி 19-02-1906 திங்கட்கிழமை.

ஸ்ரீ குருஜிக்கு பெற்றோர் இட்ட பெயர் யாது❓
🚩 மாதவ் மது என்று அழைத்தனர்  பரம பூஜனீய மாதவ சதாசிவ கோல்வால்கர்.

ஸ்ரீ குருஜி பிறந்த ஊர் எது ❓
🚩 நாகபுரி.

ஸ்ரீ குருஜி ஷாகா கார்யவாஹ் பொறுப்பேற்றது எந்த ஊர் ஷா
காவில்❓(ஷாகா என்பது தினசரி ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு மணிநேரம் ஒன்றாக சேர்ந்து உடல் மனம் அறிவுக்கு பயிற்சி எடுத்துக் கொள்வது ஷாகா கிளை என்று அர்த்தம் )
🚩துளஸீபாக் ஷாகா 1934-ல்.

ஸ்ரீ குருஜி சங்க(சிஷா வர்க) பயிற்சி முகாமில் வகித்த பொறுப்பு என்ன❓
🚩 1934 விதர்பா முகாமில் முகாம் பொறுப்பாளர்.

ஸ்ரீ குருஜி சட்டப் படிப்பில் L.L.B எப்போது தேர்ச்சி பெற்றார்❓
🚩1934.

1935 அக்டோபர் மாதம் நடந்த மாற்றம் என்ன ❓
🚩ஸ்ரீ குருஜி சாரா காச்சி சென்று இராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்தார்.

ஸ்ரீ குருஜியின் குரு யார் ❓
🚩சுவாமி அகண்டானந்தர். (இவர் விவேகானந்தரின் சமகால சீடர்கள்)

ஸ்ரீ குருஜி தீட்சை எப்போது பெற்றார் ❓
🚩1936 ஜனவரி 13 மகரசங்கராந்தி அன்று.

ஸ்ரீ குருஜி தீட்சை பெற்ற போது அவருக்கு அவரது குரு இட்ட கட்டளை யாது ❓
🚩மக்கள் தொண்டு செய்ய வேண்டும் என்பது.

நாக்பூர் எப்போது திரும்பினார் ❓
🚩1937-ல். டாக்டர் ஜி உடன் நெருக்கம் அதிகரித்தது.

 ஸ்ரீ குருஜி RSS  அகில பாரத செயலாளர் (ஸர்கார்யவாஹ்)என்று எப்பொழுது அறிவிக்கப்பட்டார் ❓
🚩1938 ஆகஸ்ட் குருபூஜை ரக்ஷாபந்தன் விழா சமயத்தில் டாக்டர்ஜியால் அறிவிக்கப்பட்டார் .

கல்கத்தாவில் யாரால் எப்போது ஷாகா  ஆரம்பிக்கப்பட்டது ❓
🚩ஸ்ரீ குருஜி யால் 1939 மார்ச் 22 யுகாதி அன்று.

No comments:

Post a Comment