Wednesday, 9 June 2021

Constitute Heritage Commission to protect ancient monuments, temples: High Court

 Constitute Heritage Commission to protect ancient monuments, temples: HC


Issues series of 75 directions to the State on issues related to their management
The Madras High Court on Monday issued a series of 75 directions to the State government on protecting historical monuments, sites, ancient temples, idols, safeguarding temple funds, conducting audits, retrieving temple properties, appointing temple staff, paying salaries to them, filling up vacancies in the post of trustee, maintaining the animals owned by the temples and safeguarding their waterbodies.

Justices R. Mahadevan and P.D. Audikesavalu ordered that the Mamallapuram World Heritage Area Management Authority should be established within eight weeks to manage and safeguard all monuments and that a 17-member Heritage Commission should also be constituted to act as an advisory body to the Authority. Historians, archaeologists and anthropologists should be part of the commission.

“The Heritage Commission shall identify all the structures, monuments, temples, antiques with historical/archaeological importance within the State of Tamil Nadu, formulate a list with age of such monuments by categorising them within their period group, issue appropriate notification, render periodical advice to the State, supervise the restoration, repair works etc., and maintain the same,” the court order read.

It also made it clear that no structural alteration or repair of any monument/temple/idol/sculpture/murals notified under the relevant Central and State legislations should take place without the sanction of the commission.

The orders were passed on a suo motu public interest litigation petition taken up by the court on the basis of a reader’s letter titled ‘The Silent burial’ published in The Hindu on January 8, 2015.

The court also ordered re-constitution of State-level and district-level expert committees, comprising of structural experts, to accord sanction for repairs or renovation of temples and archaeological sites. The committees should meet at least once every month and conduct periodical inspection of monuments and temples, prepare reports and forward them to the government for appropriate action, the court said.

The Archaeological Survey of India (ASI) was also directed to conduct field survey of temples that were more than 100 years old, estimate the damages and restore the structures as per rules within 6 to 12 months. “Architectural marvels, mural paintings, stone & wall inscriptions, wooden carving, copper plates, old antique utensils of the temples, etc, shall be protected, preserved and maintained properly,” the court ordered.

The funds of individual temples should first be utilised for the maintenance of those temples, conducting festivals, making payment to its staff including the archakas, oduvars, musicians, folklore and drama artiste and only the surplus fund could be utilised for attending the repair and maintenance of other temples, the judges said. They directed the State government to allocate sufficient funds for preservation of ancient monuments.

Registers for maintenance of jewels and other valuables must be maintained and updated properly and immovable properties of the temples must be taken stock of and retrieved from encroachments. The Hindu Religious and Charitable Endowments department website must display the number of idols of historical importance, the number stolen, the number retrieved and the status of investigation with regard to stolen cases, the court ordered.

Courtesy: The Hindu, dated 8th June 2021

Friday, 13 November 2020

முதுகுத்தண்டு பயங்கரமா வலிக்கிறது .பெரியவா

 

"முதுகுத்தண்டு பயங்கரமா வலிக்கிறது .பெரியவா"
(நடுத்தர வயசு பக்தரின் கோரிக்கை)
 
"நல்லெண்ணெய்,வெளக்கெண்ணெய். வேப்பெண்ணெய்" ( மூணு தினுசு எண்ணெயை எப்பவும் வைச்சு இருக்கணும்). (முதுகு வலி,முட்டு வலி . வயிறு சுத்தப்படுத்தல், மற்றும் பாதத்தை பாதுகாத்தல்-பெரியவாளின் அற்புத விளக்கம்)
 
நன்றி-குமுதம் லைஃப்
தொகுப்பு-லலிதா பரமேஸ்வரி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
மகாபெரியவா மடத்துல இருந்த சமயம் அது. எத்தனை எத்தனையோ பேர் அவரை தரிசிக்க தினமும் வருவா.
 
வயசானவா, இளம் வயசுக்காரா, சின்னக் குழந்தைகள் இப்படியெல்லாம் எந்த வித்தியாசமும் இல்லாம,ஆண்கள் பெரியவாளுக்கு நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் பண்ணுவா.(இரண்டுமுழங்கால்,இரண்டு முழங்கை, நெற்றி தரையில படறமாதிரி முழங்காலை மடக்கிச் செய்யறது பஞ்சாங்க நமஸ்காரம் . நெடுஞ்சாண்கிடையா அப்படியே விழுந்து செய்யறது சாஷ்டாங்க நமஸ்காரம்.)
 
தன்னை மத்தவா நமஸ்காரம் செய்யறச்சே எல்லாம்நாராயணா, நாராயணான்னு சொல்வார் ஆசார்யா .அதாவது நமஸ்காரம் தனக்கு இல்லை. பகவானுக்குன்னு அர்த்தம்.
அந்தமாதிரி ஒரு சமயம் நடுத்தர வயசு பக்தர் ஒருத்தர் , மகாபெரியவாளுக்கு நமஸ்காரம் செஞ்சுட்டு ரொம்ப கஷ்டப்பட்டு முழங்கால்களை பிடிச்சுண்டு எழுந்திருந்தார்.
 
மகாபெரியவா அவரைக் கொஞ்சம் உத்துப் பார்த்தார். அந்தப் பார்வையோட அர்த்தத்தைப் புரிஞ்சுண்ட அந்த பக்தர்,"முதுகுத்தண்டு பயங்கரமா வலிக்கிறது பெரியவாஅலோபதிலேர்ந்து ஹோமியோபதி வரைக்கும் பார்த்துட்டேன் .ஒண்ணும் கேட்கலை! குனிஞ்சு நிமிர்ந்தா வலீல உசுரு போகறது!" அப்படின்னு சொன்னார்.
 
"தைல ஸ்நானம் பண்ணற (எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கற) பழக்கம் இருக்கோ நோக்கு?" கேட்டார்,மகாபெரியவா.
 
பெரியவா அப்படிக் கேட்டதும் கொஞ்சம் நெளிஞ்ச அவர், "இல்லை பெரியவா.. முந்தியெல்லாம் பண்ணிண்டு இருந்தேன். இப்போ வேலை, வர்த்தகம் அது இதுன்னு தினமும் இருக்கற அவசரத்துல வெறும் ஜலத்தைத் தலைல விட்டுண்டு ஓட வேண்டியதா இருக்கு..!"சங்கடமா சொன்னார்.
 
"ம்..எல்லாம் அவசர யுகமாயிடுத்து.செக்குல ஆட்டின நல்லெண்ணெயை சரீரம் முழுக்க தேய்ச்சுண்டு நன்னா ஊறினதும் அரப்புப் பொடி தேய்ச்சுக் குளிச்ச காலத்துல யாருக்கும் இப்படி முதுகு வலி,மூட்டி வலியெல்லாம் வரலை.. இப்போ அவா அவா தேகத்தை கவனிச்சுக்கறதுக்குக் கூட நேரம் இல்லைங்கறா..!"சொன்ன பரமாசார்யா மறுபடியும் தொடர்ந்தார்
 
"பழசை மறக்கக்கூடாதுன்னுட்டு, சனிநீராடுன்னு பாடத்துலயே வைச்சு சொல்லிக் குடுத்தா. ஆனா படிச்சதை யெல்லாம் யாரு இப்ப ஃபாலோ பண்றா? நீ ஒண்ணு பண்ணு. இனிமேலாவது வாரத்துக்கு ரெண்டு நாள் தைல ஸ்நானம் பண்ணு. மிளகு ரசத்தையும்,பெரண்டைத் தொகையலையும் அடிக்கடி சேர்த்துக்கோ!"
 
பெரியவா சொல்ல,"அப்படியே செய்யறேன் பெரியவா..!" பணிவா சொல்லிட்டு பிரசாதம் வாங்கிக்கறதுக்காக கையை நீட்டினார் அந்த பக்தர்.
 
"கொஞ்சம் இரு...இந்த சமயத்துல எல்லாருக்குமே பொதுவான இன்னொரு விஷயத்தையும் சொல்றேன்.அதையும் கேட்டுட்டுப் போ..!" பெரியவா சொல்ல, அவர் என்ன சொல்லப் போறார்ங்கறதைக் கேட்க எல்லாரும் ஆர்வத்தோடு தயாரானா.
 
"எல்லா கிரஹஸ்தாளும் வீடுகள்ல மூணு தினுசு எண்ணெயை எப்பவும் வைச்சு இருக்கணும். சுவாமிக்கு வெளக்கு ஏத்தவும், சமையல் பண்ணவும் நல்லெண்ணெய். இதுல சிலர் சமைக்கறதுக்கு நல்ல எண்ணெயும், சுவாமிக்கு கொஞ்சம் மட்டரகத்தையும் வாங்கறதா கேள்வி அது தப்பானது. எப்பவுமே பகவானுக்கு ஒசத்தியானதைத்தான் தரணும்.
 
அடுத்தது வெளக்கெண்ணெய். பச்சைக் குழந்தையோ, பெரியவாளோ உஷ்ணத்தால் வயத்துவலி வந்துட்டா, இது கண்கண்ட மருந்து. நாபியைச் சுத்தி தடவிண்டா போதும் சட்டுன்னு குணம் தெரியும். அந்தக் காலத்துல ரொம்ப ப்யூரான வெளக்கெண்ணெயை உள்ளுக்கே மருந்தா குடுப்பா. வயத்தை சுத்தப்படுத்திடும்.
 
மூணாவது, வேப்பெண்ணெய். இதை யாரும் இப்போ வாங்கறமாதிரியே தெரியலை. ஆனா இது மூட்டுவலிக்கு சரியான ஔஷதம். வயசானவா தெனமும் இதை கை,கால், மூட்டுல தடவிண்டா, முட்டிவலி சுத்தமா வரவே வராது.
 
இன்னொரு முக்கியமான விஷயம்.எண் ஜாண் ஒடம்புக்கு சிரஸே ப்ரதானம்னு சொல்லுவா .ஆனா அந்த சிரஸுலேர்ந்து தேகம் முழுக்க சௌகர்யமா இருக்கணும்னா,அதுக்கு பாதத்தை பத்திரமா பார்த்துக்கறது ரொம்ப அவஸ்யம்.
ஸ்நானம் பண்ணி முடிச்சதும்,தலையைத் தொடைச்சுக்கறது மாதிரியே பாதத்தையும் அக்கறையா தொடைச்சுக்கணும். தெனோம் ராத்திரி தூங்கறதுக்கு முன்னால காலை நன்னா அலம்பி,பாதத்தை ஈரம்போகத் தொடைச்சுக்கணும். பாதத்தை பத்திரமா பார்த்துண்டாலே தேகம் சீர்கெடாம பத்திரமா இருக்கும்.
 
அந்தக் காலத்துல, வெளீல போய்ட்டு ஆத்துக்குத் திரும்பி வந்தா, காலை நன்னா அலம்பிட்டு ,வாய் கொப்பளிச்சுட்டுத்தான் உள்ளேயே நொழைவா! வெளி மனுஷா வந்தாலும் வாசல்ல கால் அலம்பச் சொல்லுவா. ஆனா இன்னிக்கு வீட்டுக்கு உள்ளறை வரைக்கும் செருப்புக் காலோட நடமாட ஆரம்பிச்சுட்டா.
 
அப்புறம் நோய் எப்படி வராம இருக்கும். இதையெல்லாம் சொன்னாலும் இப்போதைக்குக் கேட்டுக்கறவா, அப்புறம் அதைக் கடைப்பிடிப்பாங்கறதுக்கு நிச்சயம் இல்லை. ஏதோ சரீரத்து மேல அக்கறை உள்ளவாளுக்கு உப்யோகப்படுமேன்னு சொன்னேன். புரிஞ்சுண்டா சரி!" சொல்லி முடித்த ஆசார்யா, பக்தருக்கு பிரசாதம் குடுத்து அனுப்பினார்.
 
இது நடந்து ஒரு மாசம் இருக்கும். மறுபடியும் மகாபெரியவாளை தரிசிக்க வந்திருந்தார் அந்த பக்தர். இந்த முறை நெடுஞ்சாண் கிடையா ஆசார்யா திருவடியில விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு, அப்படியே எழுந்து நின்னார். அந்த வேகமே அவரோட முதுகுவலி முழுசா குணமாயிடுத்துங்கறதைக் காட்டித்து.

Monday, 24 August 2020

வாஞ்சிநாதன்-ஆயிரக்கணக்கான இளைஞர்களை தனது வீர சாகசத்தால் ஈர்த்த புரட்சி வீரர் (1886 - 1911)

வாஞ்சிநாதன்-ஆயிரக்கணக்கான இளைஞர்களை தனது வீர சாகசத்தால் ஈர்த்த புரட்சி வீரர் (1886 - 1911)
 
வாஞ்சி என்று அறியப்படும் வாஞ்சிநாதன் எனும் புரட்சி வீரன் திருநெல்வேலி மாவட்ட கலெக்டரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதன் மூலமாக சுதந்திரப்போராட்ட வரலாற்றில் இடம் பெற்றார்.
1886 ஆம் ஆண்டு செங்கோட்டையில் ரகுபதி ஐயருக்கும் ருக்மணி அம்மாளுக்கும் வாஞ்சிநாதன் மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சங்கரன் என்பதாகும்.இளமைக்காலத்தில் இவர் மிகவும் அமைதியான, கூச்ச சுபாவம் உள்ள சிறுவனாகவே இருந்துள்ளார் .படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ படிப்பும் , பரோடா பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்படிப்பும் படித்திருந்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவருடைய பெற்றோர் இவரை பொன்னம்மாள் என்ற பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதன் பிறகு நல்லதொரு அரசாங்க வேலையும் இவருக்குக் கிடைத்தது.
திருவிதாங்கூர் காட்டிலாகா துறையில் இவருக்கு எழுத்தராக வேலை கிடைக்க இவர் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் .திருவிதாங்கூரில் இவர் தனது மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையில் இருந்தபோது சுதந்திரப் போராட்டத்தில் வ .உ. சிதம்பரம் பிள்ளை போன்றோர் கடுமையாக ஆங்கிலேயரை எதிர்த்து போராடும் விஷயங்களை அறிந்து கொண்டார். 1908 ஆம் ஆண்டில் மார்ச் 12ஆம் தேதி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் இருந்த தேசபக்த வீரர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன. நகரம் முழுவதும் ஆவேசம் கொண்ட மக்களின் எதிர்ப்புப் பேரணிகளும் ,போராட்டங்களும் ஆங்கிலேய போலீசாரால் மிகவும் அராஜகமான முறையில் அடக்கப்பட்டன. இத்தகைய கடுமையான போலீஸ் அடக்கு முறைக்கு காரணமான திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷ் துரை மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டான். இதுமட்டுமன்றி ஆஷ் துரையின் கடுமையான நெருக்குதல் களினால் சிதம்பரம் பிள்ளையின் சுதேசி கப்பல் கம்பெனியும் நஷ்டமடைந்து இழுத்து மூடப்பட்டது . இத்தகைய காரணங்களினால் தேசபக்தர்கள் ஆஷ் துரையின் மீது கடும் கோபம் கொண்டு இருந்தனர்.
ஆஷ் துரை கொல்லப்படுவதற்கு முக்கிய பின்னணியாக செயல்பட்டவர் நீலகண்ட பிரம்மச்சாரி என்கிற சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர் ஆவார். இவர் 1910 இல் சென்னை மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்து இரகசியமான முறையில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சி படை வீரர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியும் அளித்து வந்தார். இந்த காலகட்டத்தில்தான் இவரோடு தொடர்புக்கு வந்த வாஞ்சிநாதனும் ஆயுதப்பயிற்சி பெற்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபடத் தொடங்கினான் .நீலகண்ட பிரம்மச்சாரியோடு வாஞ்சிநாதன் , சங்கர கிருஷ்ண ஐயர் ஆகிய புரட்சி வீரர்கள் ஒன்றிணைந்து பாரதமாதா சங்கம் என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலமாக செல்வாக்கு மிகுந்த ஆங்கிலேயர்களை தீர்த்து கட்டுவதற்கான திட்டங்களில்  ஈடுபட்டனர்.
 
1911 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் ஆஷ் துரையை தீர்த்து கட்டுவதற்கான முன்னேற்பாடுகளில் வாஞ்சிநாதன் இறங்கினார் . அதன் முதல் கட்டமாக தன்னுடைய அரசாங்கப் பணியிலிருந்து மூன்று மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரியில் தங்கியிருந்த வ வே.சு ஐயரை சென்று சந்தித்தார் . ஐயர் அவர்கள் ஏற்கனவே ஆங்கிலேய காவல்துறையின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்டு வந்தவர் . இது மட்டுமன்றி ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரமான கருத்துகளையும் கொண்டிருந்தார். ஐயரவர்கள் வாஞ்சிநாதனுக்கு கைத்துப்பாக்கி மூலம் குறி பார்த்து சுடுவதற்கான  பயிற்சியை வழங்கினார். திருநெல்வேலி மாவட்டத்தில் சிதம்பரனாரை சிறையில் அடைத்தது, சுதேசிக் கப்பல் கம்பெனியை நஷ்டம் அடையச் செய்தது, பொதுமக்கள் மீது அராஜகமான அடக்குமுறையை ஏவிவிட்டது போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஆஷ் துரையை தீர்த்துக்கட்ட வேண்டும் என்கிற அவருடைய திட்டத்தை வ. வே.சு ஐயர் இடம் தெரிவித்து வாஞ்சி அவரின் ஆசியும் பெற்றார். இங்கே பாண்டிச்சேரியில் இருந்த நேரத்திலே சொந்த ஊரில் வாஞ்சிநாதனுக்கு பிறந்த பெண் குழந்தையானது இறந்துவிட்ட சூழ்நிலையிலும் அவரால் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இதற்கிடையே துணை கலெக்டராக இருந்த ஆஷ் துரை பொறுப்பு கலெக்டர் பதவிக்கு மாற்றப்பட்டு இருந்தான்.
வாஞ்சிநாதனின் திட்டம் செயல்படுவதற்கான நேரம் கனிந்து வந்தது. 1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் நாள் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரை பயணம் செய்த ரயில் வண்டி மணியாச்சி ரயில் சந்திப்பில் நின்றது. இதனை முன்கூட்டியே எதிர்பார்த்து மணியாச்சி ரயில் நிலையத்தில் தனது கைத்துப்பாக்கியுடன்  காத்திருந்த வாஞ்சிநாதன் முதலாம் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்த ஆஷ் துரையின் ரயில் பெட்டி யில் விறுவிறு என்று ஏறினார் . ரயில் பெட்டியில் இருந்த அவர் தான் கலெக்டர் ஆஷ்  என்பதை உறுதி செய்து கொண்ட பின்னால் மிக நெருக்கத்தில் வைத்து தன்னுடைய கைத்துப்பாக்கியால் அவனைச் சுட்டார். இதனை சிறிதும் எதிர்பாராத ஆஷ் நிலைகுலைந்து கீழே விழுந்தான். மிக நெருக்கத்தில் வைத்து சுடப்பட்டதால் அவன் உடனடியாக உயிரிழந்தான். பிளாட்பாரத்தில் தாவி குதித்த வாஞ்சிநாதன் போலீசார் அவரை பிடிக்கும் முன்பாக அங்கிருந்த கழிவறையின் உள் ளே நுழைந்து, துப்பாக்கியை வாயில் நுழைத்துக் கொண்டு மீதமிருந்த ஒரு தோட்டாவால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். இவ்விதமாக தான் எடுத்துக் கொண்ட இலட்சியத்தில் வெற்றி பெற்று தன்னுடைய இன்னுயிரையும் பாரத அன்னையின் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டார். இன்றும் இவருடைய இந்த வீர சாகசச் செயலை நினைவுபடுத்தும் விதமாக மணியாச்சி ரயில் நிலைய சந்திப்பானது "வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்பு"என்றே அறியப்படுகிறது.