Monday 10 February 2020

"நானும் ஒரு பப்ளிக் சர்வண்ட்தான்! ஆனால், எம்.எல்.ஏ, மாதிரி காலக்கெடு ஏதுமில்லை; கவர்ன்மெண்ட் சம்பளமும் கிடையாது-பெரியவா"


"நானும் ஒரு பப்ளிக் சர்வண்ட்தான்! ஆனால், எம்.எல்.ஏ, மாதிரி காலக்கெடு ஏதுமில்லை; கவர்ன்மெண்ட் சம்பளமும் கிடையாது-பெரியவா"
(கம்யூனிஸ்ட் அன்பர்களுக்கு புண் படுத்தாத,நோக
வைக்காத ஓர் அறிவுரை)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-162
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

பத்து,பன்னிரண்டு கம்யூனிஸ்டுகள் வந்தார்கள்.
பெரியவாள், தரிசனம் கொடுக்க இசைவார்களோ,
மாட்டார்களோ என்ற தயக்கம் இருந்தது.

பெரியவாளிடம் தெரிவிக்கப்பட்டதும்,'வரச் சொல்'
என்று ஜாடை காட்டி விட்டார்கள்.

மெல்லப் பேச்சு தொடங்கியது.வந்திருந்தவர்களில்
ஒருவர், "நான் கம்யூனிஸ்ட் பார்ட்டி சார்பில்
அசெம்பிளிக்குப் போட்டியிடுகிறேன்.எனக்கு வெற்றி
கிடைக்கணும்." என்று கேட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்துப் பெரியவாள் சொன்னார்கள்;
"நீங்கள் மக்களுக்கும் தேசத்துக்கும் சேவை செய்யப்
பிறந்தவர்கள் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.நீங்கள் ஜெயித்தால் எனக்குச் சந்தோஷம்.விளையாட்டு, சண்டை, தேர்தல்களில் வெற்றியும் தோல்வியும் சகஜம். தோல்வியடைந்தால் வருத்தப்படக் கூடாது. ஜெயம் ஏற்பட்டால் தன்னுடைய கட்சி.தன்னுடைய தலைவர் , தன்னுடைய குடும்பம்- இவற்றின் சௌகரியத்துக்காக பதவியைப் பயன்படுத் தக்
கூடாது.

"உங்கள் கொள்கை,'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' (தெய்வ நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட 'மகேசன் தொண்டு' என்று பிரசாரம் செய்கிறீர்கள்)
"மக்கள் தேவையறிந்து தொண்டு செய்யணும்.
உங்களைச் சுற்றியுள்ள ஏழைகள், பெண்கள், குழந்தைகள்.. எல்லாருக்கும் சேவை செய்யணும் .சேவையில் ஜாதி -மதப்பிரிவே இல்லை. சங்கராச்சாரியராகச் சொல்லப்படும் நான்உங்கள் கொள்கைகளில் தலையிட மாட்டேன்.உங்களுக்கு எது நல்லது என்று படுகிறதோ..அதைச் செய்யுங்கள்.

"நானும் ஒரு பப்ளிக் சர்வண்ட்தான்! ஆனால்,எம்.எல்.ஏ, மாதிரி காலக்கெடு ஏதுமில்லை;கவர்ன்மெண்ட் சம்பளமும்
கிடையாது.ஓர் ஓரத்திலே உட்கார்ந்து கொண்டு தேடி வருபவர்களுக்கு ஓரிரண்டு வார்த்தை ஆறுதல் சொல்கிறேன். அவ்வளவுதான்."

கம்யூனிஸ்ட் அன்பர்களுக்கு ஒரே திகைப்பாய் போய் விட்டது. முதலில் தரிசனம் கொடுப்பதற்கே இசைவார்களா? என்று சந்தேகத்துடன் வந்தவர்களுக்கு,இவ்வளவு பெரிய
உபந்யாஸம் செய்து விட்டார்கள் பெரியவாள்.

யாரையும் புண் படுத்தாத,நோக வைக்காத சொற்கள்!
பின்னர் ஒவ்வொருவராகக் கூப்பிட்டு ஊர்,பெயர்
விசாரித்து, பெரிய மாதுளம்பழம் கொடுத்தார்கள்.
(விபூதி-குங்குமம் கொடுத்தால் அவர்கள் சங்கடப்படுவார்கள்)

அவர்கள் சென்றபின். 'எல்லாரும் நாஸ்திகர்கள்' என்றார் ஒரு தொண்டர். அவர்களிடம் இத்தனை நேரம் பேசி உடலை வருத்திக் கொள்ள வேண்டுமா? என்ற ஆதங்கம்.
"ஈசுவரன் அவாள்கிட்டேயும் இருக்கான்,
ஸர்வே பவந்து ஸுகிந"(எல்லாரும் நன்றாக இருக்க வேணும்)

தொண்டர்களுக்கு, இந்த தத்துவம் எட்டாக்கனி.

No comments:

Post a Comment