Monday 6 December 2021

எருக்கூர் நீலகண்ட பிரம்மாச்சாரியின் 132 வது பிறந்த நாள் (04 டிசம்பர் 2021)




எருக்கூர்  நீலகண்ட பிரம்மாச்சாரியின் 132 வது பிறந்த நாள்  (04 டிசம்பர் 2021)

வாஞ்சிநாதனால் ஆஷ் துரை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல் குற்றவாளியாக கருதப்பட்டு கைதாகி ஏழு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவர், கைதாகும் போது இவருக்கு வயது 21 தான்.

இந்திய சுதந்திரத்துக்காக புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாரானவர்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'புரட்சி இயக்க' நாயகனாகத் திகழ்ந்த ஒரு தியாக புருஷன்.
பாரதியின் உற்ற நண்பர்,மகாத்மா காந்தி இவரை சந்தித்து பேசுவதற்ககாக மலையடிவாரத்தில் காத்திருந்தார்.அகில இந்திய தலைவர்கள் பலரது அன்பையும் நட்பையும் பெற்றவர் ஆனாலும் யாரிடமும் எதற்கும் போய் நிற்காதவர் உடுத்திய உடையுடன் கையில் பைசா காசு இல்லாமல் கிடைக்கும் உணவை சாப்பிட்டபடி ஒரு தேசாந்திரியாக வாழ்ந்தவர் தனது இளைமைக்காலத்தை நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் கழித்தவர் இவர் பத்து நிமிடம் யாரிடம் பேசினாலும் அவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிரான போராளியாகிவிடுவர் எனப் பயந்த பிரிட்டிஷாரால் பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு வாடியவர்.

நாடுதான் பெரிது நான் அல்ல என்று சொல்லி தனக்கான எந்த அடையாளத்தையும் விட்டுச் செல்லாதவர் அவரைப் போன்றவர்களின் வரலாறு இன்றைய இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

1889ம் வருஷம் டிசம்பர் மாதம் 4ம் தேதி சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் சுப்புத்தாயி தம்பதியினரின் மூத்த மகனாகப் பிறந்தார். 2 தம்பிகள் 5 தங்கைகள் என்று பெரிய குடும்பத்தில் பிறந்தவர் இவரது குடும்ப சொத்து என்பது வறுமைதான்.
உள்ளூர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர் ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் ஊர் ஊராகச் சென்றார் சென்னையில் விபின் சந்திர பால் எனும் புரட்சிகர தேசபக்தர் பேச்சைக் கேட்டபிறகு புரட்சிகர இளைஞர்களாக மாறியவர்களில் இவரும் ஒருவர்.

1907ல் இவருக்கு மகாகவி பாரதியாரின் தொடர்பு அவர் மூலமாக வ.உ.சியின் அறிமுகம், வங்காளத்து புரட்சி வீரரான சந்திரகாந்த் சக்ரபர்த்தியுடனான நட்பு என்று எல்லாம் சேர்ந்து அவரை கனன்று எரியும் புரட்சியாளராக மாற்றியது.
குடுமியை நீக்கி கிராப் வைத்துக் கொண்டார்.1908ல் இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று 'அபினவ பாரத இயக்கத்தைத்' தொடங்கி வைத்தார். அதற்காக இவர் திருநெல்வேலியைச் சுற்றி பல ஊர்களுக்கும் சென்று ரகசியக் கூட்டங்களை நடத்தினார். இதில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்தனர்.அந்த இளைஞர்களில் வாஞ்சிநாதனும் ஒருவர்.ஆனால் நீலகண்டனுக்கு தனிநபரை கொல்வதில் எப்போதும் உடன்பாடு இருந்தது இல்லை ஒரு இயக்கமாக இயங்கி வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.
இருந்தும் வாஞ்சிநாதன் சம்பவத்தில் முதல் குற்றவாளியகாக நீலகண்டன் கைது செய்யப்பட்டார்.சிறையில் பல வகையில் கொடுமைப்படுத்தப்பட்டார் அவர் தற்கொலைக்கு முயலும் அளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தினர் சிறையில் அவர் நேர்மையாக இருந்த காரணத்தால் நாலண்டு காலத்தில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்திருக்கப்பட வேண்டும் அனால் விடுதலை செய்யும் நேரதில் சிறையில் இருந்து தப்பமுயன்றார் என்று குற்றம் சுமத்தி மேலும் மூன்றரை ஆண்டுகாலம் சிறையில் பூட்டி அவரை பிரிட்டிஷ் அரசு வாட்டியது.
தண்டனை முடிந்து 1919 ஆகஸ்ட் 14ம் தேதி இவர் விசாகப்பட்டினம் சிறையிலிருந்து விடுதலையானார். அங்கிருந்து இவர் சென்னை திரும்பி பாரதியாருடனும் வறுமையுடனும் தொடர்பில் இருந்தார் பல நாள் பச்சைத்தண்ணீர்தான் உணவு.ஆனாலும் விடுதலை உணர்வு மட்டும் மங்கிவிடவில்லை.
தேசபக்தர் சிங்காரவேலரின் புரட்சிப் பிரசுரங்களை வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மீண்டும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.அவர் எங்கு இருக்கிறார் என்பதையே தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ரங்கூன் முதல் பர்மா வரை பல சிறைகளில் அவர் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டார்.
சிறை அவரது உடலையும் உள்ளத்தையும் உருக்கிவிட்டதால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 1931ல் தேசாந்தரம் செய்யப் புறப்பட்டுவிட்டார். தனக்கென்று ஒரு அடையாளம், பெயர் எதுவுமின்றி ஊர் ஊராகப் பயணித்துக் கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தார்.புகழ்,பெருமை,கீரிடம்,குடும்பம் என்று எதுவுமற்ற இந்த துறவு வாழ்க்கை அவருக்கு பிடித்துப் போனது ஒரு கட்டத்தில் ஊர் சுற்றியது போதும் என முடிவு செய்து மைசூரு நந்தி மலையடிவாரத்தில் வாழ்ந்து வந்தார்.
அவரது தேஜஸான முகத்தை பார்த்து அவரைப் பார்க்க மக்கள் கூடினர் உங்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை தண்ணீர்தான் இருக்கிறது என்று குகையருகே ஓடிய சுனை நீரைக் கொடுத்தார் அவர் தந்த அந்த சுனை நீரால் தங்கள் வியாதிகள் குணமானதாக மக்கள் செய்தி பரப்ப கூட்டம் திரண்டது கூடிய மக்கள் அவரது பக்தர்களாயினர் அவர் எப்போதும் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்ததினால் சுவாமி ஒம்காராணந்தா என்று அழைக்கப்பட்டார்.
இது அவருக்கு பிடிக்கவில்லை எதுவுமே வேண்டாம் என்றுதானே இந்த மலையடிவாரத்திற்கு வந்தோம் இங்கே இது என்ன புது பதவி புகழ் என்று வெறுத்தவர் மக்கள் எளிதில் வரஇயலாதபடி அந்த மலையின் உச்சிக்கு சென்றுவிட்டார் அந்தப் பகுதியில் கிடைத்த பழங்களை மட்டுமே உண்டு யாருடைய தொடர்பும் இன்றி தியான வாழ்வை மேற்கொண்டார்.சதா காலமும் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்தபடி இருந்ததினால் இவர் ஒம்காரனாந்தா என்று அழைக்கப்பட்டார்.
இவரது மன உறுதி, தவத் தோற்றம் இவற்றால் கவரப்பட்ட விஜயநகர ராஜகுடும்பத்து ராணி குப்பம்மாள் என்பவர் இவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்து அரண்மனையில் இருக்க கேட்டுக் கொண்டார் இந்தப் பரதேசிக்கு இதெல்லாம் ஒத்துவராது என்று சொல்லிவிட்டு திரும்ப மலை மீது ஏறிக்கொண்டார்.
இப்படி நாற்பத்தி நான்கு ஆண்டுகள் புரட்சி வாழ்க்கையையும் ,நாற்பத்தி நான்கு ஆண்டுகள் தவ வாழ்க்கையும் வாழ்ந்த வாழ்ந்த நீலகண்ட பிரம்மச்சாரி அரசியல்,பொதுவாழ்வு ஆன்மீகம் பற்றி மூன்று நுால்களை எழுதியுள்ளார்.அவரைப் பற்றிய புத்தகங்களும் குறிப்புகளுமே சொற்பமாக இருக்கும் இந்நாளில் அவர் எழுதிய புத்தகங்களை தேடிப்பிடிப்பது சிரமமே.
துள்ளித்திரியும் இளம் வயதில் புரட்சிக்காரனாக மலர்ந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய நீலகண்ட பிரம்மச்சாரி பின்னர் ஆன்ம விசாரணையில் ஈடுபட்டு சுவாமி ஓம்காரானந்தாவாக மிளிர்ந்து ஞான ஒளி பரப்பிய அந்த மகான், 1978 மார்ச் மாதம் 4ம் தேதி இறந்தார்.மறுநாள் ஆயிரக்கணக்கானவர்கள் அழுதபடி கூடியிருக்க அவரது பூதவுடல் அக்னிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிரான சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இந்த மாபெரும் புரட்சிக்காரர் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் விதைத்த விதையும் சுதந்திரம் பெற ஒரு காரணம் என்று தலைவர்கள் புகழாரம் சூட்டினர்

நன்றி திரு எல்.முருகராஜ், தினமலர் - 04 டிசம்பர் 2021



 

Wednesday 17 November 2021

Monday 15 November 2021

FAITH - Greatness of Sri Rudram

 FAITH - Greatness of Sri Rudram

Most of us are devoted to God and engage in worship, prayer, dhyana, etc, as part of propitiating Him. But when each one asks himself the true purpose for propitiating God, the answer is best known to him and to God, of course. Generally people being bound to this world, often tend to seek worldly goals from the Lord. These are, of course, necessary to cross this world of samsara. But the Lord is so compassionate towards the ignorant devotee who is sadly missing out on the chance of seeking salvation from Him, pointed out Sri. B. Sundarkumar in a discourse. It is by His grace that the desire for salvation can take root in the devotee.

There is a very astonishing section of the Vedas, Sri Rudram, that teaches man what to seek from God and also ask for forgiveness of sins. It is a powerful mantra in the Taittiriya Samhita that is in the Krishna Yajur Veda. Sri Rudram is the fifth Prasna placed carefully in the central and fourth kanda. Namakam and Chamakam are the fifth and seventh chapters in this section and herein the Vedas pay homage to Siva, the supreme deity in Saivism and extol His omnipresence, omnipotence and omniscience. The Namakam enumerates the various epithets and names of Rudra. The Chamakam asks for fulfilment of wishes that encompass all the requirements of all beings in all walks of life. In this list is also included Moksha or salvation which is subtly shown to be the ultimate requirement over all else which are ephemeral.

Appayya Dikshitar in his Siva Ashtottara praises the Lord as “Apavarga Pradayakaya Namaha.” This means one who is capable of granting the highest Purushartha Moksha. The Lord is so magnanimous that He is satisfied with even the offer of the simple Tumbha flower and in return grants moksha to one who sincerely wishes it.

Courtesy: The Hindu, dated 17th October 2021


Friday 23 July 2021

23-07-2021 Guru Poornima Guru Purnima is also the day that marks the birth anniversary of Maharishi Ved Vyasa, the author of the great Indian epic, Mahabharata.


 23-07-2021 Guru Poornima


Guru Purnima is also the day that marks the birth anniversary of Maharishi Ved Vyasa, the author of the great Indian epic, Mahabharata. This day is also known as Vyasa Purnima. The term 'Gu' in Guru stands for darkness, and 'Ru' means removal of darkness. Thus, a guru is someone who removes all darkness from our lives



இன்று 23-07-2021 குரு பூர்ணிமா


குரு பூர்ணிமா என்பது முனிவர் வேத வியாசருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இந்த நன்னாளில் தான் வேத வியாசர் பிறந்ததாக நம்பப்படுகிறது,


வேத வியாசர் மிகச்சிறந்த குருவாக போற்றப்படுபவர். வேதங்களை, ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தியவர். உலகின் மிக நீளமான பிரம்மாண்ட காவியமான மகாபாரதத்தை எழுதியவரும் இவரே. வியாச மஹரிஷி, பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர். வேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரம்மசூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாசமஹரிஷி கூற அதனை விநாயகப் பெருமான் எழுதினார் என்கிறது புராணம்.


'குரு' இரண்டு வேர்களைக் கொண்டுள்ளது. அதாவது 'கு'என்பது 'இருள்'என்று பொருள் மற்றும் 'ரு' என்பதன் அர்த்தம் 'இருளை அல்லது அறியாமையை நீக்குதல் என்று பொருள். குருவானவர் நம்மை அறியாமையிலிருந்து விடுபட்டு நல்வழியை நமக்குக் காட்டுகிறார். நமக்கு நல்வழி காட்டிய குருவையும், ஆசிரியர்களையும், ஆன்மீகத் தலைவர்களையும் கௌரவிக்கும் நாளாக குரு பூர்ணிமா நாள் கொண்டாடப்படுகிறது.


23-07-2021 - திரு. சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு தினம்

23-07-2021 - திரு. சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு தினம் 

சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 - 23 சூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.



 

சந்திரசேகர் ஆசாத் - மா வீரர் பிறந்த தினம் ஜூலை 23





அந்த நீதி மன்றத்தில் மயான அமைதி, பெருங் கூட்டமாக பார்வையாளர்கள் காரணம்.??... குற்றவாளி.. 15 தே..வயதான  கட்டு மஸ்தான இளைஞர்?? .  ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டதனால்  கைதானவர்.. 
நீதிபதியின் , உன் பெயர், உன் தந்தை பெயர், வாழும் இடம்  என்ன, ஏது என்ற  திரும்ப, திரும்ப கேட்க்கும்  கேழ்வி களுக்கு எல்லாம்   இளைஞர்..... ஆசாத்  (விடுதலை) , சுதந்திரம், சிறைச்சாலை  என்ற பதில்களையே முறையே சலிக்காமல்  அளித்து வந்தார்.  
ஆத்திரம் அடைந்த நீதிபதி  அவருக்கு கடும் காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூற... பார்வையாளர்  கூட்டம்  ஹா, ஹா  என்று  இரங்கியது... . 
இளைஞரோ புன் சிரிப்புடன் 
 "அப்படி பதில் சொன்னால் தான் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள்  என்பதினால் தான் அப்படி பதில் அளித்தேன் என்று  சொல்ல" .........
சட் என இறுக்கம் தளர்ந்து  கோர்ட்டே நீதிபதியைப்   பார்த்து  கொல் எனச் சிரித்தது. 
 கோபம் தலைக்கேறிய  நீதிபதி  அவருக்கு கூடவே 15    பிரம்படி  தண்டனையும்  வழங்கினார்... 
இளைஞர் அசர வில்லை... 
பிரம்படி கள் கொடுக்கப்பட்ட   போது . ஒவ்வொரு அடி விழும் போதும் அவர் வாய்..... " பாரத் மாதீ கீ ஜெய்"...... "வந்தே மாதரம்" ..... என முழங்கியது. 
அந்த இளைஞர் தான் சந்திரசேகர் திவாரி....  இப்போது அவர்  பெயருடன் ஆசாத்தும்  சேர்ந்து கொண்டது. 
 மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாபாரா கிராமத்தில்  பிராமண குடும்பத்தில். சீதாராம் திவாரி    & ஜக்ரானி தேவி  தம்பதியருக்கு பிறந்தார்.. 
 காசியில் தன் தாயின் விருப்பப்படி சம்ஸ்கிருத பண்டிதராக. வேண்டும்  என்று படித்துக்கொண்டு இருக்கும் போது தான்.. ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு கைதானார்..... 
காந்தியார்... கொள்கைகளில் நம்பிக்கை இழந்த ஆசாத்.
 தீவிரவாத இயக்கமான HSRA  (ஹிந்துஸ்தான் சோஷியலிஸ்ட்  ரிப்பப்ளிக் அஸோசியேஷன்) இல்  தன்னை ஈடு படுத்திக் கொண்டு.....
 ஆங்லேயர்களை துரத்தி அடிக்க ரகசியக் கூட்டங்களில் அபாரமான யோசனைகள் கூறுவார்... அதனாலேயே இவரை பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் போன்ற எல்லா  புரச்சியாளர்களும் பண்டிட் ஜீ என்றே அழைப்பர்.. 
குறி தவறாமல் துப்பாக்கிச் சுடுவதில் புலி. 
1925ஆம் ஆண்டு நடந்த ககோரி ரயில் கொள்ளை, 
1926ஆம் ஆண்டு வைஸ்ராய் பயணம் செய்த ரயில்பெட்டியின் அடியில் குண்டு வைத்தல்..
நாடாளுமன்றத்தில் குண்டு வீச்சு 
 பஞ்சாப் சிங்கம் , லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு காரணமான   போலீஸ் சூப்பிரண்டெண்டண்ட்  ஸ்காட் டை  பழிவாங்க   பகத்சிங், சுகதேவ்,ராஜகுரு   முதலானவர்களுன் சேர்ந்து அவரை சுட்டுக் கொல்ல முயன்ற போது அது  MISTAKEN IDENTIFY காரணமாக மற்றொரு காவல் அதிகாரி யான  சாண்டர்ஸ் கொலையில் 
என எல்லா  புரடச்சி போராட்டத்திலும் பண்டித்ஜீ . யின் ... திட்டம்... கை வாடா உண்டு.  
இலச்சியத்திற்க்கு திருமணம் தடை என்று   பிரம்மச்சாரி 
போலீஸ் இவரை கைது செய்ய   வலை வீசி தேடிக் கொண்டு இருந்தது. இவரும் விடாமல் அவர்கள் கண்ணில்  மண்தூவி வந்தார்.. மாறு வேட ஸ்பெஷல்ஸிஸ்ட். 
ஜான்சி நகரின் அருகில்  உள்ள ஒரு ஆஞ்சனேயர் கோவில் பக்கம்    குடிசை போட்டுக் கொண்டு  சிறு வர்களுக்கு  சமஸ்கிருதம்  கற்றுக் கொடுக்கும்  பரம பூஜ்ய.. சாது...   மாறு வேஷ      பண்டிட் ஹரிசங்கர் பிரம்மச்சாரி ... தான்  தாங்கள் வலை வீசி தேடிவரும் ஆசாத்  மற்றும்     HSRA போர் பிரகடனங்களை வெளியிடும்... HSRA யின்   தளபதி பல்ராஜ்   என்பது பொலீசுக்கு கடைசி வரை  தெரியவே இல்லை......
  சந்திர சேகர் திவாரி, ஆசாத், பால்ராஜ், பண்டிட் ஜீ எல்லாம் இவரே. 
 இந்த ஆடு புலி ஆட்டத்திற்க்கும் ஒரு முடிவு வந்தது. 
1931ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள் ப்ரயாக்ராஜ் நகரில் உள்ள ஆல்பிரெட் பூங்காவில்  ஆசாத் தன்  புரட்சிப்படை நண்பரான சுகதேவ் ராஜ் உடன்  இருக்கிறார் என்ற  தகவல் துரோகிகளிடம்  இருந்து அரசுக்கு  கிடைக்க.
 ஆங்கிலப்படை பார்க்கை சுற்றி வளைக்கிறது , தன் நண்பர் சுகதேவ் ராஜ் ஜை தப்புவுக்க  ஆசாத் ஆங்கிலேயருடன் ஒரு மரத்தின் மறைவில் இருந்து  துப்பாக்கி சண்டையில் ஈடுபட... , அதில் இரண்டு ஆங்கில  அதிகாரிகள் படு காயம்.....( சுக் தேவ் தப்பி விடுகிறார்) அயலாரிடம் உயிருடன் சிக்கக்கூடாது  என்ற தன் கொள்கைப் படி போராடிய படியே... தன் துப்பாக்கியில் கடைசி குண்டு இருக்கும் போது,  தன்னையே சுட்டுக் கொண்டு வீர மரணம் அடைகிறார்  சந்திரசேகர திவாரி ஆசாத். அப்போது அவர் வயது 24 மட்டுமே. 
அந்தப் பார்க்கின் இன்றைய பெயர் சந்திரசேகர் ஆசாத் பார்க். 
அந்த மா வீரர் பிறந்த தினம் ஜூலை 23 1906.
 வாழ்க அவர் புகழ், வந்தே மாதரம், பாரத் மாதாகீ ஜெய்...


 

Swaraj is my birth right and I shall have it. Remebering Shri Bal Gangadhar Tilak on his birth anniversary


 

Friday 16 July 2021

DA Hike for Central Govt Employees: Salary Calculation from July, DA Arrear in 5 Points

 DA Hike for Central Govt Employees: Salary Calculation from July, DA Arrear in 5 Points

After a gap of almost one-and-half year, the central government has raised the Dearness Allowance (DA) and Dearness Relief (DR) for central government employees and pensioners. The dearness allowance and dearness relief have been hiked to 28 per cent from the existing 17 per cent. The new rate will be effective from July 1.

To fight against nationwide coronavirus pandemic, the central government halted the dearness allowance benefits for employees till June 30, 2021. The finance ministry earlier mentioned that any hike in DA due to revision on July 1, 2021, will take into account the previous hikes as well.

Nearly 48 lakh central government employees and 65 lakh pensioners will be benefitted by this latest move. It will cost the government an additional Rs 34,401 crore.

All you need to know about DA hike, DA arrears and salary calculation:

1) The government has restored three installments of dearness allowance and dearness benefits which fell due in last one and half year — 4 per cent on January 1, 2020, 3% per cent on July 1, 2020, and 4 per cent on January 1, 2021.

2) Dearness Allowance is a component of salary of government employees and pensioners. To cope up with the rising inflation, the central government revises DA and DR benefits twice every year – in January and July. DA varies from employee to employee based on whether they work in urban sector, semi-urban sector or the rural sector.

3) The central government employees has received 17 per cent DA till June 30, 2021. Now the DA has been revised to 28%, starting from July 1, 2021. If a government employee gets Rs 18,000 per month, his or her take-home salary will be increased 11 per cent or by Rs 5,040 from July.

4) It must be noted that that government will not pay any dearness allowance arrears for the period between January 1, 2020 to June 30, 2021. Cabinet approves restoring of three instalments of Dearness Allowance and Dearness Relief with effect from 01.07.2021 representing an increase of 11% over the existing rate of 17% of the Basic Pay/Pension. No arrears for the period from 01.01.2020 till 30.06.2021 shall be paid," said Jaideep Bhatnagar, principal spokesperson, government of India and principal director general of Press Information Bureau.
5) “The increase reflects the additional instalments arising on 01.01.2020, 01.07.2020 and 01.01.2021, which were earlier frozen due to covid pandemic situation. The rate of DA/DR for the period 01.01.2020 to 30.06.2021 shall remain at 17%,"

Courtesy: News 18 dated 16th July 2021

Monday 12 July 2021

Doyen of Ayurveda PK Warrier passes away. He took Arya Vaidya Sala to greater fame.


Doyen of Ayurveda PK Warrier passes away. He took Arya Vaidya Sala to greater fame.

His seven-decade-long service has made him a synonym for Kottakkal Ayurveda.

Aryavaidyan P.K. Warrier, the most respected name in Ayurveda across the world, is no more. He died at Kailasa Mandiram, the headquarters of Vaidyaratnam P.S. Varier’s Arya Vaidya Sala, Kottakkal, on Saturday. The doyen of Ayurveda breathed his last, five weeks after Arya Vaidya Sala celebrated his centenary birthday.

Managing Trustee of Arya Vaidya Sala since 1954, Dr. Warrier played a pivotal role in taking the century-old institution to heights of glory and fame. His seven-decade-long service has made him a synonym for Kottakkal Ayurveda.

A freedom fighter, Dr. Warrier gave Ayurveda a new face that viewed human beings holistically by considering the body and the mind in totality.

His book titled Smrithiparvam won the Kerala Sahitya Academy Award for the best autobiography in 2009. Its English translation titled The Canto of Memories was also hugely popular. He was elected president of the All India Ayurvedic Congress twice. As chief physician of Kottakkal Arya Vaidya Sala, Dr. Warrier treated a long array of VVIPs in the country, including Presidents and Prime Ministers.

The country honoured him with a Padma Sri in 1999, and a Padma Bhushan in 2010. Calicut University honoured him with a DLitt in 1999. He has many an honorific degree in his credit, including a Doctor of Medicine award from the University of Copenhagen.


Courtesy: The Hindu dated 11th July 2021

Wednesday 30 June 2021

ருத்ரம் சமகம் இவற்றின் அற்புத விளக்கமாக ஒரு பெரியவர் கூறுவது

ருத்ரம் சமகம் இவற்றின் அற்புத விளக்கமாக ஒரு பெரியவர் கூறுவது


ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது.

இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது.

இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும்.

மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும்.

பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.

நமகம் என்னும் பகுதியில் "சிவ பெருமானை"

நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம்.

இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர்.

சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலே போதும்.

அத்தனையும் கிடைத்துவிடும்.

சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள்.

இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.

நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்

சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.

நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.

ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.

ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும், அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.


ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன.

ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன.

ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில்

"நமச்சிவாய" என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர்.

11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹ) வருகிறது.

ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.

பெரிய புதிர் உலகிலேயே பெரிய கணித வல்லுநர்கள் இந்துக்கள் தான். 

சின்னக் குழந்தை முதல் பெரியோர் வரை தினசரி துதிகளில் கூட “டெசிமல்” முறையை (தசாம்ச) பயன்படுத்தி சூர்ய கோடி சமப் ப்ரபா என்றெல்லாம் வேண்டுவதைக் குறிப்பிட்டிருக்கிறேன்

சமகத்தில் 11ஆவது அநுவாகத்தில் ஒற்றைபடை எண்களாக 33 வரையும் இரட்டைப் படை எண்களாக 44 வரையும் எண்கள் மட்டுமே மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன.

இது வரை இதற்கு எத்தனையோ தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதிலும் ஒன்றுகூட எல்லா எண்களையும் விளக்குவதாக இல்லை.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்படி வெறும் எண்களை மட்டுமே மந்திரமாக்கிய இந்தியர்களின் கணிதப் புலமையையும் ஆர்வத்தையும் என்னவென்று புகழ்வது.

உலகில் வேறு எந்த கலாசரத்திலும் இறைவனைத் துதிபாடும் மந்திரங்களில் இப்படி எண்கள் வருவதில்லை.

ஒரு இடம் அல்ல, இரண்டு இடம் அல்ல. உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் பெரிய பெரிய எண்கள் வருகின்றன.

வேதங்களின் முழு அர்த்தம் புரியாத வெளிநாட்டுக்காரர்கள் இதற்கு மனம் போன போக்கில் பொருள் செய்திருக்கிறார்கள்.


சங்கத் தமிழ் இலக்கியமோ வேதங்களையும் வேள்விகளையும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறது!)

வேதங்களைப் பாடிய ரிஷி முனிவர்கள் தாங்கள் ரகசிய மொழியில், சங்கேத மொழியில் பாடுவதை விரும்புகிறோம் என்று பாடுகிறார்கள்.

சங்கத் தமிழ் புலவர்களும் இதை அறிந்து வேதத்துக்கு மறை (ரகசியம்) என்ற அழகிய தமிழ் சொல்லைச் சூட்டியுள்ளனர்.

ஸ்ரீருத்ரத்தின் மகிமை....

சொல்லுக்கு அடங்காதது. வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான்

 ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும்.

வேதத்தால் துதிக்கும் போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான்.அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையே தந்துவிடுகின்றது.

*ஸ்ரீ ருத்ரம்.*

எல்லா உலகமும் ஆகி

(“ஜகதாம் பதயே”) இருப்பவன்.

எங்கு தான் இல்லை?இருந்தாலும் ஒன்றொன்றாகச் சொல்லுகிறது வேதம்…

அந்த ஈச்வரன் தான் எல்லா தேவர்களின் இருதயங்களிலும் இருக்கிறான் (“தேவானாம்ஹ்ரிதயேப்ய”)

அப்படி இருந்துகொண்டு வேண்டுவார் வேண்டுவது எல்லாம் தருபவனாக இருக்கிறான்

(“விசின்வத்கேப்யஹா”)

மகான்கள் வடிவிலும் அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும் விளங்குகிறான்.

சேனைத் தலைவர்களாகவும் சேனைகள் எனவும் இருப்பதை

 (“சேனாப்ய_சேனா_நிப்யச்ச:”) என்கிறது

அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும் (“க்ஷத்ருப்ய:”), தச்சர் வடிவிலும் (“தக்ஷப்ய:”), குயவர் வடிவிலும் (“குலாலேப்ய:”); கருமார் வேடத்திலும் (“கர்மாறேப்ய:”), பறவைகளைப் பிடிக்கும் வேடர் வடிவத்திலும் (“புஞ்சிஷ்டேப்ய:”), மீன் பிடிக்கும் செம்படவ வடிவிலும் (“நிஷாதேப்ய:”) இருக்கிறான்….

சிவ ச்வரூபமோ அலாதியானது.

ஆலகால விஷத்தை உண்ட கண்டம் (“நீலக்ரீவாய”) அதன் மேல் விபூதி பூசப்பட்டு இருக்கிறது (“சிதிகன்டாய”).

ஒரு சமயம் பார்த்தால் நீண்ட ஜடா முடி (“கபர்தினே”) இருக்கிறது.மறு கணம் பார்த்தால் கேசம் நீக்கப்பட்ட ("வ்யுப்தகேசாய”) தலை.

ஆயிரக்கணக்கான கண்கள் (“சகஸ்ராக்ஷாய”), குறுகிய வாமன வடிவுடைய (“ஹ்ரச்வாய்ச வாமனாய்ச”) அவனே, பெரிய வடிவத்துடனும் (“ப்ருஹதே”) தோன்றுகிறான்.பால விருத்த வடிவங்களிலும் காட்சி அளிக்கிறான்.

வேதங்களால் துதிக்கப்படுவனாகவும் (“ச்துத்யாய”), வேத முடிவில் வீற்றிருப்பவனாகவும் (“அவசான்யாய”) விளங்குகிறான்.

ஆகவே தர்மத்தின் வடிவமான பரமேச்வரனைத் தர்ம தேவதையே வாகனமாகத் தங்குகிறது என்பதை, (“பப்லுசாய”) என்ற சொல்லால் வேதம் வர்ணிக்கிறது.

சம்சாரமாகிய மரம் ஜனன மரணங்களுக்கு ஏதுவானது.

அதை வேரோடு வெட்டி வீழ்த்தி முக்தியைத் தருபவன் ஆதலால் (“பவச்ய ஹேத்யை”) எனப்படுகிறான்.

பக்தனைக் காப்பதற்காக அவன் கூடவே செல்லுபவன் என்று (“தாவதே”) என்ற பதத்திற்கு அர்த்தம் சொல்லுவார்கள் பெரியவர்கள்.

எனவே, பக்தனுக்காகத் தூது செல்லவும் தயங்குவதில்லை பரமன் என்பதைத் திருவாரூரில் சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தியாகராஜப் பெருமான் தூது சென்றதால் அறியலாம். அது மட்டுமா? இன்னும் உனக்காக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா, அதனையும் செய்கிறேன் என்கிறானாம்.

இதைத்தான் ஸ்ரீ ருத்ரம்,(“தூதாய ச ப்ரஹி தாய ச”) என்று காட்டுகிறது.

தவறு செய்யாதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை.

அதிலும் தனது பக்தன் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு மன்னிக்கிறான் ஈச்வரன்.

இதைத் தான் வேத மாதா நமக்கு, (“ஸஹமானாய”) என்ற பதத்தால் உணர்த்துகிறாள்.

திருக் கருப்பறியலூர் (தலை ஞாயிறு) என்ற ஸ்தலத்தில் ஸ்வாமிக்கு’அபராதக்ஷமாபநேச்வரர்’   (குற்றம் பொறுத்த நாதர்) என்று பெயர்.

(“நமஸ் ஸோமாய ச”) என்று தொடங்கும் எட்டாவது அனுவாகத்தில் ஸ்ரீ பஞ்சாக்ஷரம் வருவதால் பெரியவர்கள் இதை ஜபிப்பதை விசேஷமாகக் கருதுவார்கள்.


இதைத் தான் ஞான சம்பந்தரும், ”வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே “ என்று பாடினார்.

இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சிவ பூஜை செய்பவன் சிவனாகவே ஆகி சிவமே அடைகிறான் என்பதில் ஐயமில்லை..

மரியாதைக்குரிய சிவராம் பந்த் ஜோக்ளேகர் என்ற சிவராம்ஜி


 சிவராம்ஜி என்றால் எனக்கு நல்லோர் வட்டம்நினைவில் வரும்

தமிழ் நாட்டில் ஆர் எஸ் எஸ் தொடங்கியது 1939 ஆம் ஆண்டில்.
1944 முதல் ஸ்ரீ சிவராம் ஜீ தமிழ்நாட்டில் ஆர் எஸ் எஸ் ஸின் பிரசாரகராக இருந்து பணியாற்றியுள்ளார்

29 -06 -1999 அன்று அவர் காலமானது வரை தமிழ்நாட்டுக்காகவே அவர் உழைத்தார். அவரது பிறந்த தேதி 17-05-1917. நட்சத்திரம் ரேவதி. 
பௌதிக சாஸ்திரத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். ஆராய்ச்சி யாளராக வானிலை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றினார்.
எளிமை, லக்ஷியப்பற்று, முன்னுதாரணங்களை உருவாக்கியவர், ரிஷி போன்ற தவ வாழ்க்கை, ஆர் எஸ் எஸ் ஸின் கொள்கையை அச்சு பிசகாமல் கடைபிடித்து நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவக் கார்யகர்த்தர்களை உருவாக்கியவர்.
ஒரு ஜீவன் ஒரு லக்ஷிய வாழ்க்கை என கர்மயோகியாக வாழ்ந்தார்.
பரமாச்சாரியார் எப்படியோ அப்படி வாழ்ந்தார் என்று திரு இராமகோபாலன் ஜீ அவர்களால் வர்ணிக்கப்பட்டவர்.
ஆர் எஸ் எஸ் ஸின் பிரசாரகராக தமிழ்நாடு முழுவதும் பணியாற்றியுள்ளார்.தனது 70 வது வயது முதல் சேவைத் திட்டங்களின் பொறுப்பை வகித்தார். நல்லோர் வட்டம் என்ற அமைப்பை நிறுவி சேவைப்பணிகளுக்கு புது வடிவம் தந்தார்.
கிராம முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டார் . மதிப்பிற்குரிய அண்ணா ஹஸாரே அவர்கள் தமிழகம் வந்திருந்து தனது யோசனைகளையும் அனுபவங்களையும் சிவராம் ஜீ யுடன் பகிர்ந்து கொண்டது சிறப்பு.
விஜில் என்னும் அமைப்பை ஏற்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வைக் கொண்டு வர முயன்றார். இதன் மூலம் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை ஒருங்கிணைத்தார்.
இரத்ததானம் என்பது மிகவும் அறியப்படாத காலகட்டத்திலேயே அதற்கான முயற்சிகளைத்தொடங்கிவிட்டார்.
கண்தானம் என்ற புதிய முயற்சியை சங்கர் நேத்ராலயாவின் துணையுடன் வெற்றிகரமாக்கினார் .
வாழ்வில் நேர்மையைக்கடைபிடிப்பவர்களை தேடிச்சென்று சந்திப்பதென்பதை அவர் தனது தினசரி வேலையாகக் கொண்டிருந்தார்.
இதன்மூலம் சமுதாயத்திற்கு நேர்மையாய் வாழ்வதில் நம்பிக்கையை வளர்த்தார் . 
மருத்துவ மாணவர்களுக்கு தங்களது படிப்புக்கும் பயிற்சிக்கும் இறந்துபோன உடல்கள் தேவை. ஆனால் அவை கிடைப்பதில் பல சிரமங்களிருந்தன. அதைக் கருத்தில் கொண்டு தேக தான இயக்கத்தை தொடங்கினார். தனது மறைவிற்குப் பிறகு தனது உடலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு ஒப்படைக்க வேண்டி உயில் எழுதி வைத்திருந்தார். அதேபோல் அவரது விருப்பம் நிறைவேற்றப்பட்டது.
ஒருங்கிணைப்பின் மூல சூத்திரத்தை ஒரு வரியில் சொல்லுவார் , "சுத்தணும்- கூடணும்".
ஒவ்வொரு நிமிடமும் ஒருபாடம் நமக்கு சொல்லித்தருவார்.
அவரது நூற்றாண்டில் நினைவு கூறவும் உறுதி ஏற்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.
அவரது ஆசிகளை வேண்டி வணங்கி ஏற்போம்.

Wednesday 9 June 2021

Constitute Heritage Commission to protect ancient monuments, temples: High Court

 Constitute Heritage Commission to protect ancient monuments, temples: HC


Issues series of 75 directions to the State on issues related to their management
The Madras High Court on Monday issued a series of 75 directions to the State government on protecting historical monuments, sites, ancient temples, idols, safeguarding temple funds, conducting audits, retrieving temple properties, appointing temple staff, paying salaries to them, filling up vacancies in the post of trustee, maintaining the animals owned by the temples and safeguarding their waterbodies.

Justices R. Mahadevan and P.D. Audikesavalu ordered that the Mamallapuram World Heritage Area Management Authority should be established within eight weeks to manage and safeguard all monuments and that a 17-member Heritage Commission should also be constituted to act as an advisory body to the Authority. Historians, archaeologists and anthropologists should be part of the commission.

“The Heritage Commission shall identify all the structures, monuments, temples, antiques with historical/archaeological importance within the State of Tamil Nadu, formulate a list with age of such monuments by categorising them within their period group, issue appropriate notification, render periodical advice to the State, supervise the restoration, repair works etc., and maintain the same,” the court order read.

It also made it clear that no structural alteration or repair of any monument/temple/idol/sculpture/murals notified under the relevant Central and State legislations should take place without the sanction of the commission.

The orders were passed on a suo motu public interest litigation petition taken up by the court on the basis of a reader’s letter titled ‘The Silent burial’ published in The Hindu on January 8, 2015.

The court also ordered re-constitution of State-level and district-level expert committees, comprising of structural experts, to accord sanction for repairs or renovation of temples and archaeological sites. The committees should meet at least once every month and conduct periodical inspection of monuments and temples, prepare reports and forward them to the government for appropriate action, the court said.

The Archaeological Survey of India (ASI) was also directed to conduct field survey of temples that were more than 100 years old, estimate the damages and restore the structures as per rules within 6 to 12 months. “Architectural marvels, mural paintings, stone & wall inscriptions, wooden carving, copper plates, old antique utensils of the temples, etc, shall be protected, preserved and maintained properly,” the court ordered.

The funds of individual temples should first be utilised for the maintenance of those temples, conducting festivals, making payment to its staff including the archakas, oduvars, musicians, folklore and drama artiste and only the surplus fund could be utilised for attending the repair and maintenance of other temples, the judges said. They directed the State government to allocate sufficient funds for preservation of ancient monuments.

Registers for maintenance of jewels and other valuables must be maintained and updated properly and immovable properties of the temples must be taken stock of and retrieved from encroachments. The Hindu Religious and Charitable Endowments department website must display the number of idols of historical importance, the number stolen, the number retrieved and the status of investigation with regard to stolen cases, the court ordered.

Courtesy: The Hindu, dated 8th June 2021